• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக மோசடியில் ஈடுபட்ட பெண் கைது 

இலங்கை

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண் , யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் , வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல் , விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார்.

அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தினை வழங்கி வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தினை வழங்கியுள்ளார்.

பணத்தினை வழங்கியவர் தனது வெளிநாட்டு , பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ் . பொலிஸார் , அப்பெண்ணை கைது செய்தனர்.

மேலும் குறித்த பெண்ணின் வங்கி கணக்கின் ஊடாக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply