நீராடிக்கொண்டிருந்த மனைவியை புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கணவர்
இலங்கை
மனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் முறைபாடு கிடைத்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீராடிக்கொண்டிருந்தபோது கணவர் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர், அவர் அதனை உறவினர்களுக்கு அனுப்பியதாகவும் மனைவி குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.