• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்

இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்

மேலும் மூன்றாவது தவணையைப் பெற தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றும் ஜூன் மாதத்தில் குறித்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply