• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதே தற்போது பலரிடம் ஆச்சரிய தகவலாக பார்க்கப்பட்டு வருகிறது

சினிமா

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதே தற்போது பலரிடம் ஆச்சரிய தகவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட வரும் நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான சஞ்சீவிடமும் இந்த கேள்வியை முன்வைத்து இருந்த நிலையில் அவர் சொல்லிய பதில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல நடிகர் விஜய்யின் கல்லூரி நண்பராக இருந்தவர் சஞ்சீவ்.  இவரும் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருகிறார். கல்லூரியில் இருவரும் கொஞ்ச காலமே இணைந்து படித்திருந்தாலும் அதன் பின் இவர்கள் நட்பு இத்தனை வருடமாக தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக சஞ்சீவின் பேட்டியில் அவரிடம் விஜய் குறித்து கேட்கும் போது அவர் தன்னுடைய நண்பர் என்கிற உரிமையில் பல தகவல்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரை அதைவைத்து ட்ரோல் செய்ய ரசிகர்கள் தொடங்கினர். அவர் தற்பெருமை பேசுவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் சஞ்சீவ் விஜய் குறித்து பேசுவதையே தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீரியல் நடிகர் ஸ்ரீயுடன் அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியின் இறுதியில் விஜயின் அரசியல் குறித்து உங்களின் பார்வை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகரான ஸ்ரீ, சஞ்சீவ் விஜய் சார் குறித்து பேசும் பல ட்ரோல்கள் வெளிவந்தது. இருந்தும் அதை குறித்து விஜய் சாரோ, சஞ்சீவ் இதுவரை எதுவும் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. அவர்கள் இருவரிடம் ஒரு கண்ணியமான நட்பு இன்றளவும் இருக்கிறது. இதனால் விஜய் சார் அரசியலுக்கு வருவது எங்களுக்கு சந்தோஷமான விஷயமாகவே இருக்கும்.

தொடர்ந்து பதில் அளித்த சஞ்சீவ் உலகத்துக்கே மகிழ்ச்சியாக இருக்கும் விஷயம் எங்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லதே நடக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். ஆனால் கவனமாக வேறு எதுவும் பேசாமல் தவிர்த்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வரும் கிழக்கு வாசல் சீரியலில் சஞ்சீவ் நடிக்க இருந்தார். ஆனால் எஸ்.ஏ.சி சொல்லியே வெளியேத்தினர் என்ற தகவலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply