• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய சட்டங்களால் ஜனநாயக ஆட்சி முறையில் தாக்கம்

இலங்கை

இணைய பாதுகாப்பு சட்டம் மற்றும்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க்  தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையிலே  அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு படையினருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றன ஒன்றுகூடல் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கின்றன எனவும் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய  புதிய சட்டங்கள் குறித்தும் தான்  ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply