• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலன்

இலங்கையை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், நடிகருமான ஜெயபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் ஜெயபாலன். கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ள ஜெயபாலன், சமூக ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
  
ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்ற ஜெயபாலன், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பித்தப்பையில் கல் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது குடும்பத்தினர் பிரான்சில் வசிப்பதாகவும், தற்போது இவர் ஓமாந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Leave a Reply