• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு வழங்கப்படும்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வட மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார்.

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பற்றுத்தருவதாக உறுதி வழங்கினார்.

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply