• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு முன்னோக்கிச் செல்ல நவீனமயப்படுத்தல் அவசியம்

இலங்கை

”இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக நேற்றிரவு இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் (Cadet) சிதறல் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”’நாம் முன்னேற வேண்டுமானால், நாட்டில் ஒரு பெரிய நவீனமயமாக்கல் இருக்க வேண்டும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது நம் நாட்டிற்கு ஆபத்து, நாம் அனைவரும் உலகில் தனித்தனியாக வாழமுடியாது.

அத்துடன் ‘இலங்கை போன்ற நாடு போர் செய்து அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்கக் கூடாது. அப்படிச் செய்தால் நம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டோம் என்றே அர்த்தம். மேலும் இன்று செங்கடலில் நமது பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால், அவற்றைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.  எதிர்காலத்திலும் நாம் தயாராக இருக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply