• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உருவ கேலிக்கு பயந்து தயங்கி நின்ன நடிகர்! அவரை அழைத்துக் கொண்டு போய் அஜித் என்ன செய்தார் தெரியுமா?

சினிமா

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று அஜித்தின் போட்டோகிராபி என்ற கேப்ஷனில் அஜித் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு சில தெரியாத விஷயங்களை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறிய செய்திதான் இன்று வைரலாகி வருகின்றது. அதாவது சினிமாவில் மட்டுமில்லாமல் அஜித் ஏராளமான வித்தைகளை தெரிந்த ஒரு அற்புத கலைஞராக இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.

அதில் ஒன்றுதான் இந்த போட்டோகிராபி. ஒரு சமயம் வீரம் படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அந்த பத்திரிக்கையாளர் கூறினார். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அப்புக்குட்டி. தேசிய விருது வாங்கிய நடிகரும் கூட.

அந்தப் படத்தின் போது அப்புக்குட்டி ஒதுங்கியே இருப்பாராம். தன்னுடைய உருவம், தோற்றம் கருதி ஒரு தாழ்வுமனப்பான்மையில் யாருடனும் பேசாமல் தனியாகவே இருப்பாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த அஜித் அப்புக்குட்டியை அழைத்து வழக்கம் போல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

நாம் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டுமானால் முதலில் பயத்தையும் கூச்சத்தையும் போக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த தாழ்வுமனப்பான்மையை போக்குவதற்காக அஜித் அப்புக்குட்டியை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டூடியோவிற்கு சென்றாராம்.

முற்றிலும் அவரது தோற்றத்தை மாற்றியிருக்கிறார். அப்புக்குட்டியின் நன்மைக்காக அஜித் அதை செய்தாலும் என்னவோ காரணத்தால் அப்புக்குட்டிக்கு படவாய்ப்புகளே வரவில்லையாம். அதனால் மிகவும் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அப்புக்குட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டாராம். தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும்,

மளிகை சாமான் வாங்கவே காசு இல்லை என்றும் கூறி அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த சிலர் உதவி செய்திருக்கிறார்கள். அஜித்தும் அதை பார்த்து அவரே எதிர்பாராத ஒரு பண உதவியை செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இதைப் பற்றி யாரிடமும் வெளியில் சொல்லவேண்டாம் என்றும் அஜித் கேட்டுக் கொண்டாராம்.

இதே போல் அஜித் எத்தனையோ உதவிகளை செய்து வருகிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது வெளியில் தெரியவேண்டாம் என்றும் நினைக்கிறார்.நம்ம கூட இருக்கிறவங்கள நாம பாத்துக்கிட்டா நம்மள மேல இருக்கிறவன் பார்த்துப்பான் ......!!!

THANK YOU
UMADEVI

Leave a Reply