• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் கண்டுபிடிப்பு

இலங்கை

மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் மாசு தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புறக்குகோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் நேற்று (21) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், மேற்படி அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 04 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தந்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 45, 52 வயதுடைய கல்கெடிஹேன, மொரட்டுவ, வத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply