• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை-பிரசன்ன ரணதுங்க

இலங்கை

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் .விஜித ஹேரத் தெரிவித்த கருத்து பொய்யானது என்றும் அடிப்படை ஆதாரமற்றது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயற்படும் போது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அரசாங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply