• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2 வாரங்களுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்

இலங்கை

அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் எனக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply