• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோப்பாயில் பெண் மீது வாள் வெட்டு - ஒருவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் காயமடைந்த பெண்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை  கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply