• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பதிவு செய்யப்படாத மசாஜ் நிலையம் - 3 பெண்கள் கைது

இலங்கை

ஆயுர்வேத திணைக்களத்திலோ அல்லது பிரதேச உள்ளூராட்சி மன்றத்திலோ எவ்வித பதிவும் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் மையம் ஒன்று பேராதனை பொலிஸாரால் சோதனைக்குட்டுத்தப்பட்டுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25, 28 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்கள் மசாஜ் மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சோதனையின் போது பல பல்கலைக்கழக மாணவர்களும் அங்கு இருந்ததாகவும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply