• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்

இலங்கை

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில்  அவர்கள்  இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்திருந்தனர்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், டொக்டர்  நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்தியா சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply