• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு

இலங்கை

கம்பளை நகரின் பாடசாலை ஒன்றில் அண்மையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே , மரம் முறிந்து விழுந்த அன்று சம்பவ இடத்திலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று கம்பளை-இல்லவத்துர பகுதியை சேர்ந்த மொஹமட் செயாம் அஸ்வி என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply