• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புவனா ஒரு கேள்விக்குறி

சினிமா

"புவனா ஒரு கேள்விக்குறி" நாவலை எடுத்துக்கொண்டு அப்போ வளர்ந்து வரும் நாயகனிடம் செல்கிறார் அவர். இந்த நாவலை படமெடுக்க எடுத்தால் மிகப்பெரும் வெற்றி பெறும். நாம் எடுக்கலாம் என சொல்ல அந்த நாயகனுக்கு அந்த கதையில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவர் மறுத்து விட கொஞ்ச நாள் கழித்து பஞ்சு அருணாசலம் அந்த கதையை திரைப்படமாக்க படம் மிகப்பெரும் வெற்றியையும் பெயரையும் பெறுகிறது. கதையைப்பற்றி சொன்னவரும், மறுத்தவரும் யாருமல்ல....

கமல்-ஆர்.சி.சக்தி.....நட்பு அப்படின்னா ஒரே வயதுக்காரங்க தான் சேர்வாங்க..

ஆர்.சி.சக்தி அன்னை வேளாங்கண்ணி படத்தில் துணை இயக்குனர். கமலோ துணை நடன இயக்குனர். அங்கே தான் இரண்டு கலை தாகங்களும் சந்தித்துக்கொண்டன. கோவளத்தில் ஷுட்டிங் இடைவேளையில் கமல் கடலில் குளிக்கலாம் என சொன்னதும் சரியென சொல்லி இருவரும் நீந்த கொஞ்சம் உள்ளே சென்றதும் கமல் தடுமாறி தண்ணீர் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். சக்தி பயந்து போய் கமலை இழுக்க வாழ்க்கை முடிந்தது என்கிற நிலைக்கு சென்று விட்டார் சக்தி. கரையிலிருந்த இவர்களது உதவி ஒளிப்பதிவாளர்கள் பலரையும் அழைத்து காப்பாற்ற சொல்ல யாருமே வரவில்லை பயந்து கொண்டு. ஒரு வழியாக கமலை கரை சேர்த்து சோர்ந்து நடுங்கி உட்கார்ந்திருக்கிறார் சக்தி. கமல் கேஷுவலாக "வாங்கண்ணே போகலாம்.." எனச்சொல்ல "போடாங்..." என முறைத்திருக்கிறார் சக்தி. நீச்சல் சாம்பியன் என சொன்னதை நினைத்து கோபம் வந்திருக்கலாம்... அப்போது முதல் வயதுக்கு மீறிய ஒரு நட்பு குடிகொண்டிருந்தது. 

கமல் திரையுலகை படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் அவருடைய சந்தேகங்களை அங்கிருக்கும் யாரிடமாவது கேட்டால் போ போ என எறிந்து விழுவார்கள். "ஒரு குளோஸப் எதுக்கு லென்ஸ் மாற்றி...ஒரு டிராலி ஷாட்டையே முகம் வரை கொண்டு போய் எடுக்கலாமே..." போன்ற சந்தேகங்களுக்கு..."அப்படியா...உன்னை மாதிரி ஆளு தான்யா வேணும்..." என அள்ளி அணைத்துக்கொண்டவர் சக்தி...  

கமல் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது தான் நடிப்பு. இது தான் படங்கள் என வேறொரு சுவையை கமலுக்கு காட்டியவர் சக்தி. சக்தி படமெடுக்கலாம் என உதவி இயக்குனரிலிருந்து வெளியேறிய போது அவருக்கு கதை சொன்னவர் கமல் தான். "உணர்ச்சிகள்" என்று சக்தி எழுதிய கதைக்கு மெருகு கூட்டி எழுதிய அவரையே நாயகனாக்கியவர் சக்தி. 

சிவாஜி-எம்ஜிஆரின் நாயக சினிமாக்கள் தவிர்த்து வேறு யாரும் பெரிதாக வலம் வர முடியாத வெற்றிடத்தில் கமலால் முடியும் என சொல்லிக்கொண்டே இருந்தவர் சக்தி.

அந்த நட்பு குரு-சிஷ்ய நட்பு. குருவின் தோள் மீது கை போடும் சிஷ்யன். சக்தியின் கதை சொல்லும் பாங்கு அலாதி. அனுராதாரமணின் சிறுகதையை சிறை என எடுத்த போது ரௌடி கேரக்டருக்கு ராஜேஷை தேர்வு செய்த போது திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. மென்மையான நடிகரான ராஜேஷ், ஆண்டனி என்கிற ரௌடியாக நடித்து படம் வெற்றி பெற்று எல்லோரையும் மூக்கில் விரல் வைக்கச்செய்தவர் சக்தி. 

சக்தியின் படங்கள் எடுக்கும் பாணி வேறானதாக தமிழ்த்திரையுலகில் உருவானதால் கமலின் பாணி சேராததாலும் கமல் அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. கொடுத்த கால்ஷீட்டையும் கமலோடு "மனக்கணக்கு" என வேறொரு தயாரிப்பாளருக்கு சொதப்பி செட்டாகவில்லை. பின் விஜய்காந்தை வைத்து எடுக்க படம் தடுமாறியது. கமலே கை கொடுத்து தூக்கி விட்டார். அவரே நடித்துக்கொடுத்த அந்த நட்பில் ஒரு நன்றிக்கடன் இருந்தது.

தண்ணீரில் மூழ்க இருந்தவனை தூக்கி கரைசேர்த்த நன்றிக்கடன்....

கலையுலகம் விரட்டிய போது வாரியணைத்து கலையை சொல்லிக்கொடுத்த நன்றிக்கடன்...

கதைகளைப்பற்றி பேசி பேசி கலைகளை அறிமுகப்படுத்திய நன்றிக்கடன்.

சில நட்புகளுக்கு "எந்த" வித்தியாசமும் கிடையாது. நட்பு மட்டுமே அங்கு ஆதார ஸ்ருதி....

#இருவர்....

Selvan Anbu

Leave a Reply