• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னை ஆச்சரியப்படுத்திய அஜித்தின் பயணம்! சூப்பரா சொன்ன தம்பிராமையா

சினிமா

அஜித் தற்போது வெறிகொண்டு நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. படம் ஆரம்பித்த நேரத்தை கணக்கில் கொண்டால் லியோ படத்தின் ரிலீஸ் சமயத்திலேயே இந்தப் படமும் வெளியாக வேண்டியது. ஆனால் ஆரம்பம் முதலே சில பல பிரச்சினைகளால் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கிடப்பிலேயே போடப்பட இந்த மாத பிப்ரவரிக்குள் எப்படியாவது படத்தை முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித் மற்றும் ஆரவ் சம்பந்தமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் அனிருத் இசையில் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா அஜித் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். அஜித்துடன் தம்பி ராமையா இணைந்து வேதாளம், வீரம், விசுவாசம் போன்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் அஜித்துடனான நெருக்கம் அதிகமாகவே இருக்கும் என பல ரசிகர்கள் அஜித்தை கேட்டதாக சொல்லுங்கள் என பார்க்கும் போதெல்லாம் கூறுகிறார்கள் என ஒரு பேட்டியில் தம்பி ராமையா கூறினார்.

மேலும் அஜித்தின் பயணம் என்பது சற்று வித்தியாசமானது. நிலவில் போய் காலை வைத்த பிறகு தங்க முடியாது. கீழே வந்துவிட வேண்டும். இருந்தாலும் அங்கேயே அவர் இருக்கிறார் என்றால் அவரை தூக்கிக் கொண்டு போனது ராக்கெட். அவராவே போயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் கீழே வந்து விடலாம். ஆனால் கொண்டு போனது ராக்கெட். ஒரு இடத்திற்கு போய் பத்துவருடமாக அதே இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது.

அப்போ அவர் எதையோ இழந்திருக்கிறார். அதுவும் பெரிதாக இழந்திருக்கிறார். மிகவும் தனித்துவம் கொண்ட மனிதர் அஜித். ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை புகழையும் அடைக்காத்துக் கொண்டிருக்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்னாலும் வெறிப்பிடித்த ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோ ஒரு தனித்துவம் அவரிடம் இருக்கிறது.

தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கக் கூடிய நடிகர். உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அவர் உயர்ந்தவர்தான். அந்த இடத்திற்கு அவர் சாதாரணமாக போயிருக்க முடியாது. அமராவதியில் இருந்து விடாமுயற்சி வரைக்கும் உள்ள படிக்கட்டுகளை பார்க்கும் போது ஆங்காங்கே பல மேடு பள்ளங்களை முள் செடிகளை கடந்து தான் போயிருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக் கொண்டது விடாமுயற்சி மட்டும்தான் என தன் உள்ளத்தில் இருந்து அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக பேசினார் தம்பி ராமையா.

தேன்மொழி
 

Leave a Reply