• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிப்பு

இலங்கை

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களும், கிருமிநாசினிகளும்  நேற்று வவுனியா, பம்பைமடுப்பகுதியில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.

‘அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், கிருமிநாசினிகளுமே ‘ இவ்வாறு மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க,சுகாதாரபரிசொதகர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் கடந்த வருடம், ஏப்ரல் மாதம் வவுனியா தெற்குசிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply