• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாக்குதல் சம்பவம் : அவிசாவளை – புறக்கோட்டை பேரூந்துகள் சேவையிலிருந்து விலகல்

இலங்கை

அவிசாவளை – புறக்கோட்டை மார்க்கத்தில் சுமார் 60 பேரூந்துகள், சேவையில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம டிப்போவின் அத்தியட்சகர் மற்றும் அவரது ஊழியர்கள் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கொடகமை பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து, 60 பேருந்துகள் சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply