• Welcome to TamilsGuide
செய்திகள் 1

19 வயது இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

இலங்கை

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் இருந்து ஹென்டியங்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஹென்டியங்கல பாலத்திற்கு அருகில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இளைஞன் பலத்த காயமடைந்து களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply