• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. 

சினிமா

வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா?!..

விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் ஒரு உறவு உண்டு. அது பலருக்கும் தெரியாது. மதுரை மேலூரை சேர்ந்த குமரேசன் அங்கிருந்த கணேஷ் திரையரங்கில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்தார். அந்த திரையரங்கத்தின் ஓனர் மீனாட்சி சுந்தரம். மிகவும் நல்ல மனிதர். திரைப்பட இயக்குனர் காரைக்குடி நாராயணன் ‘அச்சாணி’ என்கிற படத்தை எடுத்தபோது அவருக்கு பண உதவி செய்தவர்.

அதில் ஏற்பட்ட நட்பில் ‘இவனுக்கு எதாவது வேலை கொடுங்க’ என சொல்லி குமரேசனை நாராயணிடம் அனுப்பி வைத்தார். நாராயணனின் அலுவலத்தில் ஆபிஸ் பாய் போல எல்லா வேலையும் செய்தார் குமரேசன். ஒருநாள் விஜயராஜ் என்பவர் மதுரையிலிருந்து ஒரு சிபாரிசு கடிதத்தோடு நடிக்க வாய்ப்புகேட்டு நாராயணனை பார்க்க அங்கு போனார். மதுரைக்காரர் ஒருவர் அங்கு வர குமரசனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

ஓடிப்போய் இயக்குனரிடம் சொன்னார். ஆனாலும், விஜயராஜுக்கு நாராயணனால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. காரணம் சொல்லி அனுப்பிவிட்டார். சில வருடங்களில் அதே நாராயணன் இயக்கத்தில் விஜயராஜ் ஹீரோவாக நடிக்க அதே படத்தில் குமரேசன் உதவி இயக்குனர். அந்த இயக்குனர் இராமநாரயணன். விஜயராஜ் அப்போது விஜயகாந்தாக இருந்தார். அந்த உதவி இயக்குனர் குமரேசன் பின்னாளில் தமிழ் சினிமாவை கலக்கிய ராமராஜன். அந்த திரைப்படம் சிவந்த கண்கள். வெளியான ஆண்டு 1982. இந்த படத்தில் விஜயகாந்துக்கு வசனத்தை எப்படி பேச வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர் ராமராஜன். அதன்பின் ஹீரோவாக மாறினார் ராமராஜன்.

1987ம் வருடம் தமிழ் புத்தாண்டில் விஜயகாந்தின் படம் வீரபாண்டியன் படம் வெளிவந்த போது, ராமராஜன் ஹீரோவாக நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படமும் வெளியானது. இதுதான் காலத்தின் கோலம். விதியின் விளையாட்டு. நளினிக்கு உடன் பிறவாத அண்ணன் போல இருந்தவர் விஜயகாந்த். அந்த நளினியைத்தான் ராமராஜன் திருமணம் செய்து கொண்டார்.

விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் கருணாநிதி எனில் ராமராஜனின் திருமணத்தை நடத்தி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் திமுகவில் இருந்தபோது ராமராஜன் அதிமுகவில் இருந்தார். அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். ஆனாலும், விஜயகாந்த் மறைந்தபோது ராமராஜன் கண்டிப்பாக கண் கலங்கி இருப்பார்.

நளினி தனது கணவர் ராமராஜனை பிரிந்தபோது உடனே அவரை தொலைப்பேசியில் அழைத்து ‘உனக்கு அண்ணன் நான் இருக்கிறேன். எப்போது எந்த உதவி என்றாலும் என்னை கேள்’ என ஆறுதல் சொன்னவர் விஜயகாந்த். அதனால்தான் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நளினி. அப்போது கண்ணீர் மல்க விஜயகாந்த் பற்றி உருகிப்பேசினார். பின் ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு போய்விட்டார்.THANK U LIVE TAMIL NEWS

Annadurai Duraisamy

Leave a Reply