• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பம்-கல்வி அமைச்சு

இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்மாகியுள்ளன.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் உயர்தர பரீட்சை காலத்தின் போது, விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply