• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு

இலங்கை

நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக  கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள  சில முக்கிய வீதிகள் இன்று(05)  மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் ரயில் கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும், உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டாகார்டன் சந்தி வரையான பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்று  கட்டமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply