சுவிற்சர்லாந்து நாடுதழுவிய மாபெரும் பொங்கல் விழா
03.02.2024 சுவிற்சர்லாந்து நாடுதழுவிய மாபெரும் பொங்கல் விழாவில் சுவிஸ் நாட்டின் தேசிய விடுதலை வீரன் வில்லியம்ரெல் ன் கதையினை எமது பண்டைக் கலைகளில் ஒன்றான கூத்துவடிவில் மேடையேற்றி இருந்தோம். அதில் எமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் இணைந்து நடித்திருந்தார்கள். வில்லியம்ரெல் ஆக எனது மகன் ஆதியன் நடித்திருந்தார். எமது கலைகளை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதில் எனது கடமையைச் சரிவரச் செய்துள்ளேன் என்பது மனநிறைவைத் தந்தது. இதில் இரண்டு சுவிஸ் நாட்டவரும் எமது கூத்தினில் நடித்துப் பெருமை சேர்த்தது பார்ப்போரை மேலும் மகிழ்வித்தது. நடித்த, பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் எமது நன்றி.
குறிப்பு:-
இந்த நாடகமானது அன்ரன் பொன்ராஜா அவர்களின் இணைநெறியாள்கையில் “ஹப்பி பெர்டே ரெல்” எனும் ஜெர்மன் மொழி நாடகத்தின் ஒரு காட்சிக்காக தயார்செய்யப்பட்டது. பின்னர் அதன் தேவைகருதி எமது முயற்சியில் தனிக் கூத்து வடிவத்தில் நாம் சிறிய மாற்றங்களைச் செய்து மேடையேற்றி வருவது குறிப்பிடத் தக்கது.
பங்குபற்றிய நடிகர்கள்
ஆதியன் ரமணதாஸ்
சிவசங்கரன் தில்லையம்பலம்
கப்றியெல்லா கிலௌசர்
ஜானிக் கினோடல்
பிரியந்தி சாய்கிருஷ்ணா
விதுஷா
ஒப்பனை
தயா லோகதாசன்
இசை
பாபாஜி
எழுத்து
கலைவளரி ஏ.ஜி.யோகராஜா
நெறியாள்கை உதவி
கலைவளரி வாவி.பாஸ்கர்
நெறியாள்கை, ஒருங்கமைப்பு
கலைவளரி சக.இரமணன்