• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. 

சினிமா

சினிமா என்பது ரசிகர்களுக்குதான் பொழுதுபோக்கு. ஆனால், அதை சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கு அது வியாபாரம் மட்டுமே. அதாவது இவ்வளவு பணம் போட்டு இவ்வளவு லாபம் எடுக்க வேண்டும் என்பதுதான் கணக்கு. ஒரு தயாரிப்பாளர் இப்படித்தான் திட்டமிட்டுவார். அதையும் குறையும் சொல்ல முடியாது.

ஏனெனில் சினிமா என்பது கோடிகளை முதலீடு செய்யும் ஒரு தொழில். அதனால்தான் யார் இயக்குனர், யார் நடிகர்.. இவரை வைத்து படமெடுத்தால் எவ்வளவு லாபம் வரும் என திட்டமிட்டு ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுக்கிறார். அப்படி திட்டமிட்டு எடுக்கும் படங்களே தோல்வி அடைவதும் உண்டு. அதுதான் சினிமா.

5 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். திரைத்துறையில் பல அனுபவங்களை பெற்றவர். சினிமாவில் பல வேடங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ரசிகர்களால் உலக நாயகன் எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் நான்கைந்து படங்களில் நடிக்கவிருக்கிறார்.

கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களை எப்படி திட்டமிட்டு தேர்ந்தெடுப்பார் என்பதை அவரை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றாக யோசித்து, தேவைப்பட்டால் சிலரிடம் விவாதித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை முடிவு செய்வார். ஆனால், 10 நிமிடத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட கதையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

கமலுக்கு இயக்குனர் ஐ.வி.சசி நல்ல நண்பராக இருந்தவர். ஒருநாள் இரவு 12 மணிக்கு கமலின் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். அவருடன் ஒரு தயாரிப்பாளரும் வந்திருந்தார். அவர்களை உள்ளே அழைத்து கமல் பேசியதும் ‘இவரின் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு நாளைக்கு காலையில் பேப்பரில் வெளிவரவேண்டும்’ என சசி சொல்ல கமலும் உடனே ஒப்புக்கொண்டார்.

அப்படி கமல் நடித்து வெளியான படம்தான் குரு. 1980ம் வருடம் ஜூலை மாதம் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 100 நாட்கள் ஓடியது. சினிமாவில் சில சமயம் இப்படி உடனே முடிவெடுத்து ஒரு படம் உருவாகும் என்பதற்கு குரு படத்தை உதாரணமாக சொல்லலாம்.
 

Leave a Reply