• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை

உள்நாட்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு, மற்றும் பதவி உயர்வு வழங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே குறித்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸ் வைத்தியசாலையில் தனியான சாளரத்தை திறக்குமாறு, செயற்குழுவின் தலைவர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply