• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசேட நடவடிக்கையின் கீழ் 729 சந்தேக நபர்கள் கைது

இலங்கை

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply