• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின்  கிணற்றில் இருந்து  29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் எனப்  பொலிஸாரின் விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply