• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவியிடம் அத்துமீறிய 6 மாணவர்கள் கைது

இலங்கை

பல்கலைக் கழக மாணவியைப்  பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்களை சமனலவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply