• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸாரால் 803 சந்தேக நபர்கள் கைது

இலங்கை

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 5 சந்தேக நபர்கள் விளக்கமறியல் உத்தரவின்படி, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ், ஒரு கிலோ 852 கிராம் கஞ்சா, 443 கஞ்சா செடிகள், 2 கிலோ 117 கிராம் மாவா மற்றும் 169 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply