க பாலேந்திரா ஆளுமைச் சிறப்பிதழை வெளியீடு
சினிமா
இலங்கையில், யாழ்ப்பாணத்திலிருந்து க. பரணீதரன் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை 50 ஆண்டு நாடகப் பணிகளைக் கௌரவிக்கும் முகமாக ,க பாலேந்திரா ஆளுமைச் சிறப்பிதழை வெளியிட்டு உள்ளது.
இந்த இதழில் குழந்தை ம சண்முகலிங்கம், ப . ஸ்ரீ ஸ்கந்தன், சோ. தேவராஜா, அ ஜேசுராசா, மாணிக்கம் சத்தியமூர்த்தி, மன்சூர் முகமட், சித்திரலேகா மௌனகுரு, மாணிக்கவாசகர் வைத்திலிங்கம், கா இந்திரபாலா ஆகியோர் நாடக முயற்சிகள் பற்றி எழுதிய குறிப்புகளும், ஒரு நீண்ட நேர்காணலும், ஆக்கமான “பார்வையாளர்கள்” நாடக பிரதியும் இந்த இதழில் சேர்க்கப்பட்டுள்ளன.