• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு

இலங்கை

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்போது யாழ்ப்பாணத்தில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 7 ஆயிரத்து 299 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 401 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், டெங்கு நோயினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply