• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியாவில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

இலங்கை

மஸ்கெலியா தேயிலை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தையொன்று  சிக்கியது.

இந்நிலையில் இது குறித்து பொதுமக்கள் உடனடியாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தியுள்ள நிலையில் அங்கு வந்த நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,  குறித்த சிறுத்தையை பத்திரமாக மீட்டுச் சென்றுள்ளனர்.
 

Leave a Reply