• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

இலங்கை

11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்றைய தினம் நீராடச் சென்றுள்ள நிலையிலேயே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணமற்போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், சுழியோடி அதிகாரிகளும், பொதுமக்களும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply