• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடியை தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு

இலங்கை

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இன்னிலையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கைகளும் பலவீனமான சமூக பாதுகாப்பும் பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்ந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கிவருகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

வறிய நிலையில் உள்ளவர்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் தற்போதைய அரசாங்கம் பதில் நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் 17 வீதமானமக்கள் ஒரளவு அல்லது கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் நிலை இலங்கையில் காணப்படுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது
 

Leave a Reply