• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்கிழக்குப்  பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

இலங்கை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு பல்கலைகழக தாழ்நில பிரதேசத்தில் காணப்படுகின்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறு இருப்பினும் சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும்” இவ்வாறு உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply