• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீண்ட வார இறுதியை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுப்பு

இலங்கை

நீண்ட வார இறுதியை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எதிர் வரும் நீண்ட வார இறுதியைக் கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் செல்லும் பயணிகளின் நலன் கருதியும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply