இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவரை தூக்கிலிட்ட ஈரான்
இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் அந்த தொடர்பில் இருந்தார் என்றும், குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் அவருக்கு தொடர்புள்ளது என்றும், முக்கியமான தரவுகளை திரட்டி மொசாத் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அவர் கைமாறியுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஈரானுக்கு எதிரான குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஒரு மொசாத் அதிகாரியிடம் இரகசிய தகவல்களை கையளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அந்த நபர் எப்போது கைதானார் அல்லது அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் ஈரான் அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர். தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட Zahedan சிறையில், மூன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,
பலுச் போராளிகள் குழு ஒன்று மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தைத் தாக்கிய சம்பவத்தில் 11 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்கலுடன் தப்பிய சம்பவத்திற்கும் ஒரு நாளுக்கு பின்னர் மொசாத் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.