அம்மன் வாசல் திருக்கேணிக்கான சுற்றுமதில் மற்றும் வளைவு
இத்திருப்பணிகான நிதிப்பங்களிப்பினை நல்க பாணாவிடைச்சிவனின் அருமைப் பக்தர்களான ஒரு குடும்பத்தினர் ஆர்வம் காட்டி வருவதுடன், ஆரம்பக்கட்டமாக 10 இலட்சம் ரூபாயினை வழங்கி ஆரம்பித்து வைத்துள்ளனர்.
எம்பெருமானின் பெருங்கருணையினால் எண்ணிய இத்திருப்பணி நிறைவுறவும் அவர்களின் எண்ணங்கள் ஈடேறவும் இன்றைய நன்னாளில் வேண்டிக் கொள்வோம்.
(தகவல்:
ஆலய வெளிவீதியில் அமைந்திருந்த இரு திருக்கேணிகளும் இரு தலவிருட்சங்களும் மிகவும் பழமையானவை. அதில் மூலவரான சிவனிற்கு கிழக்கு வாயிலில் அமைந்திருந்த முதலாவது திருக்கேணி எக்காரணத்திற்காக மூடப்பட்டதோ தெரியவில்லை. முதலாவது தலவிருட்சமும் முதுமையினால் 2019 ஆம் ஆண்டு காலவதியாகிப்பொனது.)