• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொளுத்திப்போட்ட பயில்வான்.. கொந்தளித்த கீர்த்தி பாண்டியன்

சினிமா

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. இந்த படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட் (E5 ENTERTAINMENT) இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'கண்ணகி' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கண்ணகி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனிடம் "வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டை என்றால் , இந்த வாரம் உன் படம் வருகிறது, உன் கணவன் (அசோக் செல்வன்) படம் வருகிறது எந்த படம் வெற்றி பெரும்?" என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும் கடுப்பான கீர்த்தி பாண்டியன், "எங்க வீட்டிற்கு வந்து பார்த்தீர்களா நாங்கள் சண்டைப்போட்டதை. போட்டியும் இல்லை சண்டையும் இல்லை" என்று பதிலளித்தார்.
 

Leave a Reply