• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹாங்காங் தேர்தலில் 30 சதவீதத்துக்கும் குறைந்த வாக்குப்பதிவு

இங்கிலாந்திடம் இருந்து 1997-ல் சுதந்திரம் அடைந்த ஹாங்காங் பின்னர் சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் தற்போதுவரை ஹாங்காங் தன்னாட்சி பிராந்தியமாகவே செயல்படுகிறது. இதற்கிடையே இங்குள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனா, தைவான் நாடுகளுக்கு கடத்தி விசாரிக்கும்வகையில் ஒரு சட்டத்திருத்த மசோதா 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது ஹாங்காங்கை ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என கூறி ஹாங்காங் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அந்த மசோதா கைவிடப்பட்டது. எனினும் ஹாங்காங் நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் யாரும் இதில் வாக்களிக்கவில்லை. இதனால் வெறும் 27.5 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. இது ஹாங்காங் நிர்வாகம் மீது மக்களின் அதிருப்தியை காட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.2 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply