• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு மீண்டும் இருளில் மூழ்கும் - பொறியியலாளர்கள் எச்சரிக்கை

இலங்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் இருளில் மூழ்கும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு நாடளாவிய ரீதியிலும் திடீரென மின் தடை ஏற்பட்டது.

மின் விநியோக பாதை அமைப்பில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின்சார விநியோக பாதை முறைமையை புனரமைக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் பரிந்துரைத்திருந்ததாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்றும் குறித்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் இருளில் மூழ்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது மற்றும் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கும் புதிய முறை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
 

Leave a Reply