• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற காலநிலை - கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதியால் பயணிகக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அதே பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக மக்கள் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply