• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு - இருவர் உயிரிழப்பு

இலங்கை

யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்” யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கடந்த செப்ரெம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply