• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவுஸ்திரேலிய பெண் எம்.பிக்கு மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம்

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பியான 37 வயதான பிரிட்டானி லாவ்கா தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.
  

இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களில் பலருக்கு இதுபோன்ற சோகம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

என்னுடைய உடலில் போதை பொருள் கலந்திருந்தது என்பது மருத்துவமனையில் நடந்த பரிசோதனை முடிவில் உறுதியானது. ஆனால், அவற்றை நான் எடுத்து கொள்ளவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என்னை தொடர்பு கொண்டு பேசிய பிற பெண்களுக்கும் கூட மயக்க மருந்து செலுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இது சரியல்ல. நம்முடைய நகரில் மயக்க மருந்து கொடுப்பது அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற ஆபத்து இல்லாமல், நாம் மகிழ்ச்சியாக சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபட முடிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் லாகா, குயின்ஸ்லாந்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். 
 

Leave a Reply