• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

இலங்கை

உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு இவ்வாறு மேலும் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்ததான மீன் குஞ்சுகளை வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 19.11.2023ம் திகதி ஆரம்பமானது.

புதுமுறிப்பு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு 150000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அதற்கு மேலதிகமாக இன்றையதினம் மேலும் 50000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த நிகழ்வில் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply