• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காத்தான்குடியில் போதைப் பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது

இலங்கை

காத்தான்குடியில் 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேர்  கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நால்வரும் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து பொலிஸ்கொன்ஸ்டபிளையும், சட்டவிரேத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை தடுப்புக்  காவலில் வைத்து விசாரணை செய்யுமாறும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Reply