• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்- இன்றும் முன்னெடுப்பு

இலங்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், குறித்த பகுதியில் நேற்றைய தினம் மூன்றாவது நாள் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது,; ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் 24 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் பொலிஸார், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply