• Welcome to TamilsGuide
செய்திகள் 1

50,000 அமெரிக்க டொலர் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை

இலங்கை

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் பின்னர் கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ஆசிய கிரிக்கட் பேரவையினால் வழங்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர் தொகை இதுவரை அந்த ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய தொகையை ஊழியர்களுக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Leave a Reply